அனுபவிக்கிறது என்கிற வார்த்தை இப்பல்லாம் கெட்ட வார்த்ததையாகிடுச்சு.
ஒரு காலத்தில – நல்லா படிச்சி பெரிய வேலைக்கி போயி அழகான பொண்ண கல்யாணம் பண்ணிட்டு காரு பங்களானு வாழ்க்கைய அனுபவிக்கணும் என்பது ஒரு இலக்காக இருந்துச்சு. இன்னிக்கு தேதிக்கு இப்படி யாரும் யோசிக்கிறதா தெரியலை.
எப்படியாவது படிச்சி முடிச்சி நல்லா பே பண்ற வேலைக்கி போயி வாழ்க்கைய நல்லா அனுபவிச்சிட்டு அப்புறமா கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆயிறணும் என்பது தான் பல பேரோட எண்ணம். (நோகாம நொங்கு திங்கறது இப்படித்தான்!)
இதுல அனுபவிக்கிறதுங்கற வார்த்தைய தான் மெயினா ஆராயணும்.
இன்னிக்கு தேதிக்கு இளசுங்களைப் பொறுத்தவரைக்கும்”அனுபவிக்கிறது”ங்கறதுக்கு நேரடி அர்த்தம் – தண்ணியடிக்கிறதும் ஃபிகர்களோட ஊர் சுததறதும் தான். கல்யாணம்கிறது சந்தோஷ உலகத்துக்கான ஒரு என்ட்ரினு இப்பல்லாம் யாரும் நெனக்கிறதில்லை. அது ஒரு கடிவாளம்னு ஆயிடுச்சு. வரப்போறவ எப்படிப்பட்டவளோ அவகிட்ட நம்மோட ஒவ்வொரு முவமென்டுக்கும் விளக்கம் சொல்லிட்டு இருக்கணும் எதுக்கெடுத்தாலும் நிக்க வச்சி கேள்வி கேப்பா. தேவையா இது.? கல்யாணம் பண்ற வயசா இது. நல்லா லைஃபை என்ஜாய் பண்ணிட்டு அப்புறமா கல்யாணம் பண்ணிக்கலாமே.
காதல்ங்கற பெயர் பாப்புலரா வளர்ந்த காலத்தில ஒரு பொண்ணு கூட பேசறதே பெரிய விஸயம். (தாத்தா காலத்தில எல்லாம் ஒரு ஆணும் பெண்ணும் தனியா சந்திச்சிக்கிட்டாலே அவன் அவளை வச்சிருக்கான் என்றே அழைக்கப்படும். காதல் என்று பெயர் இருந்தாலும் அதுவே பெரிய கெட்டவார்த்தை!!)அப்படியே பேசிட்டாலும் ஐ லவ் யு சொல்றது பெரிய மேட்டர். நெரடியா சொல்றது பெரிய சிக்கல்னு இருந்த காலத்தில ஒரு லட்டர் எழுதி தட்டிவிட வேண்டியது. லட்டருக்கு பதில் சிக்னல் வர வரைக்கும் என்ன சொல்லித் தொலையப் போறாளோ என்று டெ்னசனில் நகம் கடித்துக் கொண்டிருக்க வேண்டும். (சில உலக அழகிகள் லட்டரை ஆஜானுபாகு தாய் மாமனிடம் ஃபார்வேடு செய்து நம் முதுகில் டின் கட்டியதும் உண்டு!)
ஒருவழியாக பச்சை சிக்னல் கிடைத்ததும் காதல் அங்கே இங்கே என்று வளர ஆரம்பிக்கும்.. அது கல்யாணத்தில் தான் முடியணும்னு எழுதப்படாத விதி.s கல்யாணம் வரை போகாட்டா அது காதல் தோல்வியாக கருதப்படும். தற்கொலை செய்து கொள்கின்ற காதலர்கள மிக அதிகமாக இருந்தது ஒரு நேரத்தில். என் கல்லுரி நண்பர்கள் இரண்டுபேரை இப்படித்தான் இழந்தேன்.
என் பள்ளிப் பருவத்தில எங்க ஊர் போஸ்ட் மாஸ்டர் பொண்ணு காதல் தோல்வியால் கயிறு மாட்டிக் கொண்டு இறந்தது நல்லா ஞாபகம் இருக்கு.
இப்பல்லாம் காதல தோல்வியால் தற்கொலை போன்ற செய்திகள் ரொம்ப ரேரா தான் வருது. முன்ன மாதிரி இல்லை. நமம காதலர்களுக்கு மனசில உறுதி வந்துடுச்சுணு சந்தோஷப்பட்டுக்க முடியாது. எது நடந்தாலும் அதை ஈஸியா எடுத்துக்கற மனநிலைக்கு மக்களை ஊடகங்கள் இழுத்துட்டு போயிட்டிருக்கு.அதனால உந்தப்படற இளசுங்க அடுத்தவங்களுக்கு டிஸ்டர்ப் இல்லைன்னா அது தப்பில்லைங்கற நிலைக்கு வந்திட்டாங்க.
கற்பு எனபது மனசு இல்லை உடம்பு தான்னு கதைகள் கவிதைகள் பெண்களை முன்னேற்றுபவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள செகஸ டாக்டர்கள் இவங்களை வச்சி பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் சொல்லிட்டிருக்கு.
கல்யாணம் பண்ணதுக்கப்புறமா புருனுக்கு.மனைவிக்கு உண்மையா இருந்தா போதும்னு புதுசு புதுசா தத்துவங்கள் ரிப்பீட் ஆகுது.
கற்புக்கு நடிகைகள் விளக்கம் சொன்னா நாம கேட்குற லெவலுக்கு வந்தாச்சு.
நான் தான் சறுக்கிட்டேன் நீயாவது பாத்து நடந்துக்க என்று சொன்னால் புத்தி சொலறதா எடுத்துக்கலாம். என்ன மாதிரியே நீயும் வந்து விழுந்துருனு நடிகைகள் கருத்து சொல்றாங்க. அதையும் நம்ம பத்திரிக்கைங்க வேல மெனக்கெட்டு பிரசுரிக்கிறாங்க. (நடிகைங்க எல்லாம் குடும்ப பெண்கள் இல்லையானு யாராவது குரல் உசத்தப் போறாங்க. நடிகைகள் குடும்ப பெண்கள் தான். ஆனா குடும்ப பெண்கள் எல்லாம் நடிகைகள் இல்லையே)
உடனே நாடு முழுக்க அந்த விஷயம் பத்தி தான் டிஸகஷன்.
டிவில டாக் ஷோவுக்கு அது தான் தீம்.
நம்ம சினிமா கவிஞர்களும் வட்டத்துக்குள்ள வாழ்ககையைில்லை வெளியே வந்து அனுபவினு தப்பு பண்ணாத வாழ்ககை என்ன வாழ்ககைனு நிறைய பாட்டு எழுதி விடறாங்க.
பாய் பிரண்ட் கேர்ள் பிரண்ட் இல்லைனனா என் மூஞ்சி யாருக்கும் பிடிக்காம போச்சேனு பெரிய கவலையாயிடுது.
இந்த லட்சணத்தில் யாராவது ஆசார அனுஷ்டானங்களை ஒழுங்கா கடைபிடிச்சாங்கன்னா அம்மாஞ்சி பழம் பஞ்சாங்கம் சுத்த கர்நாடகம் என்ற படட்ம் தான் கிடைக்கிது.
ஆக இப்ப இருக்கிற ஜெனரேஷனுக்கு ஒத்துப் போக குறைந்த பட்ச தகுதி வத்தலோ தொத்தலோ ஒரு பாய் பிரண்ட் கேர்ளபிரண்ட் அப்புறம் அட்லீஸ்ட் ஒரு பீராவது அடிச்சிருக்கணும்.
இல்லண்ணா தாத்தாவாக்கிடறாங்க.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தண்ணி ஆறா ஓடுது.
எந்த விஷேஷம் வந்தாலும் தணிணி இல்லாம களைகட்டுறதில்ல. வீட்டுல ஒரு கல்யாணம்னா கூட முந்தின நாள் ஃப்ரண்சுஙகளுக்கு தீர்த்தம் காட்டியிருக்கணும்.
யாராவது ஒரு தும்மல் அடிஷனலா போட்டாக்கூட பாரட்டி வேணும்னு கேக்கிறாங்க. பார்ட்டினாவே அது தண்ணி பரர்ட்டிதான்!
தண்ணி அடிச்சது வெளில தெரியக்கூடாதுணு இருந்த காலம் எல்லாம் மலையேறிப்போச்சு. டீடெய்லா வெளில சொல்லி பெருமை அடிச்சிக்கிற யதார்த்த மனநிலைக்கு வந்துட்டோம்.
தண்ணி பழக்கம் எல்லாம் அவருக்கு இல்லை. ஏதாவது பார்ட்டினா லைட்டா எடுத்துக்குவார் – என்று பல மனைவி மார்களே ”பிராட் மைன்ட்”டுககு வந்துவிட்டார்கள்.
உலகம் மாறிக்கிட்டு வருது நாமளும் மாறித்தான் ஆவணும் நாம என்ன தினம் தினம் குடிச்சி சீரழயறமா? (??) என்னிக்காவது ஒரு நல்லது கெட்டதுக்குத்தான் குடிக்கிறோம். பழக்கம் ஆயிட்டா தான் தப்பு களவும் கற்று மறக்கணும் தெரியுமா என்று தன் பக்கம் எனனை அழைக்கிறார் ஒருவர்.
நீ பீர் கூட குடிச்சதில்லையா? பின்ன எதுக்கு உயிர் வாழற? என்று ஏளனம் செய்கிறார் இன்னொருத்தர்.
ஆக குடிக்கிறது மட்டும் தான் லட்சியம்ணு ஆயிடுச்சு.
இந்த போஸ்டை எழுதிய பின்பு இதை பதியலாமா வேணாமாணு படிச்சி பாத்து சொல்லுங்க என்றேன் ஆபீஸ் நண்பரிடம்
””கண்டிப்பா போடுங்க. அப்பத்தான் உங்களுக்கு கலாச்சாரக் காவலன் பட்டம் கிடைக்கும்” என்று விட்டு என்னைக் கிருமி மாதிரி பார்த்தார்.
Filed under: கருத்துக்கள் | குறிச்சொற்கள்: அனுபவித்தல் காதல் அழகான பெண் தண்ணி இளசு கல்யாணம் புருஷன் மனைவி கற்பு பாய் | Leave a Comment »